மூளை, மனம் என்ற சித்தாந்தத்துடன் சம்பந்தப்பட்ட. மருந்து, மாத்திரைகளைவிடவும் மனோரீதியான அணுகுமுறைகள் மூலமாக மூளையை ஆரோக்கியப்படத்துவதுதான் சாத்தியம்.... அழகு!
* ஒரு மனிதனின் மூளை ஆரோக்கியத்தோடு இருப்பதற்கான விதை, அவன் கருவுக்குள் இருக்கும்போதே போடப்பட வேண்டும். அந்த வகையில் கருவுற்ற பெண்களின் உடல், மன ஆரோக்கியம் மிக மிக முக்கியம்.
* பிறந்ததும் குழந்தை அழுதுவிட்டாலே, மூளை இயங்கத் தொடங்கிவிட்டது என்று அர்த்தம். உரிய காலத்தில் தவழுதல், நடத்தல் ஆகியவை நடக்காவிட்டால் முதல் உதவிக்கு நாட வேண்டியது "நியூரோ' சம்பந்தப்பட்ட மருத்துவரைத்தான்!
* வலிப்பு நோய், பக்கவாதம் ஆகியவை மட்டுமல்ல... அடிக்கடி வருகிற தலைவலியும்கூட சில சமயங்களில் மூளையில் ஏற்படும் பிரச்னைக்கான அலாரம்தான். தொடர் தலைவலி என்றால் தவறாமல் டாக்டரிடம் காட்டிவிடுங்கள்!
* ஞாபக மறதி அன்றாட வாழ்க்கையின் நடைமுறைகளைப் பாதிக்கிற அளவுக்குப் போனால் உஷாராகிவிடுவது உத்தமம். அடுத்தவர்களால் அடிக்கடி சுட்டிக்காட்டப்படுகிற அளவுக்கான ஞாபக மறதி என்பது மூளையில் ஏற்படும் ஏதோவொரு ரிப்பேரின் விளைவுதான்!
* மூளை தொடர்பான எந்த வியாதியாக இருந்தாலும் டாக்டரின் சிகிச்சையைவிட நாம் ஏற்படுத்திக் கொள்ளும் சூழல் மிக முக்கியம். கோப-தாபங்களிலிருந்து விலகியிருக்கப் பழக வேண்டும், பொறாமை, பேராசை, வன்மம் போன்ற நெகட்டிவ் உணர்வுகளை அண்டவே விடக்கூடாது!
* சிறுகட்டி தவறி விழுவதால் ஏற்படும் தலைக்காயம் போன்றவற்றை மருந்து போட்டு மறந்துவிவது சரியல்ல. தலையில் ஏற்படுகிற சிறு காயம் - உடனே தன் விளைவைக் காட்டாமல் பல வருடங்கள் கழித்து பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்து இருக்கிறது என்பதை உணருங்கள்!
* அளவுக்கு மீறிய மன உளைச்சல் மொத்தமாக நரம்பு மண்டலத்தையும் ரத்த ஓட்டத்தையும் காவு வாங்கக்கூடியது. முறையான உடற்பயிற்சி, யோகா மற்றும் தியானம் உளைச்சலில் இருந்து ஓய்வு கொடுக்கும். நடப்பது நடந்தே தீரும் என்ற தத்துவார்த்த அணுகுமுறையை விழிப்பு உணர்வோடு கடைப்பிடிக்க ஆரம்பித்தால் பிரச்னைகளைப் பதறாமல் அணுக முடியும்!
* கூடுமானவரையில் பிரச்னைகளைத் தொலைபேசி மூலம் தீர்த்துக்கொள்ள முனையாதீர்கள். வெறும் குரல்கள் எப்போதுமே நம் மனப்பாங்கை எதிராளிக்கு முழுமையாகக் காட்டாது. தவறான புரிந்து கொள்ளுதலால் பரஸ்பரம் எரிச்சலும் விரக்தியும் அதிகமாகிப் போகும். மூளை சூடேறி வரிசையாகப் பல விளைவுகளை நம் உடலில் காட்டும்.
* சுறுசுறுப்பாக வேலை பார்த்துவிட்டு ஓய்வு பெற்றவர்களை, "போதும் உழைச்சது, சும்மா உட்கார்ந்து நிம்மதியா ரெஸ்ட் எடுங்க" என்று முடக்கிப் போடக்கூடாது. "சும்மா" என்பது மூளையைப் பொறுத்தவரை சைத்தான். எதிர்மறையான விஷயங்களை மட்டுமே நினைக்க வைத்து, அதிலேயே மூழ்கடித்து, பல மன வக்கிரங்களுக்கும் உடல் உபாதைகளுக்கும் வெற்றிலைத் தாம்பூலம் வைத்துவிடும்!
* ஓய்வு பெற்றாலும் பிஸியாகவே இருந்தாலும் ஒவ்வொரு மனிதனும் தன் மன அமைதிக்கு ஏற்ற புத்தகங்களைத் தேடிப் பிடித்துப் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். புத்தகங்களைப் போல் ஒரு நல்ல நண்பன் மூளைக்குக் கிடைக்கவே முடியாது. ஆன்மிக நாட்டம் கொண்டவர்களுக்கு அது தொடர்பான புத்தகங்கள் மிகப் பெரிய வரப்பிரசாதம்!
* ஞாபக மறதி அன்றாட வாழ்க்கையின் நடைமுறைகளைப் பாதிக்கிற அளவுக்குப் போனால் உஷாராகிவிடுவது உத்தமம். அடுத்தவர்களால் அடிக்கடி சுட்டிக்காட்டப்படுகிற அளவுக்கான ஞாபக மறதி என்பது மூளையில் ஏற்படும் ஏதோவொரு ரிப்பேரின் விளைவுதான்!
* மூளை தொடர்பான எந்த வியாதியாக இருந்தாலும் டாக்டரின் சிகிச்சையைவிட நாம் ஏற்படுத்திக் கொள்ளும் சூழல் மிக முக்கியம். கோப-தாபங்களிலிருந்து விலகியிருக்கப் பழக வேண்டும், பொறாமை, பேராசை, வன்மம் போன்ற நெகட்டிவ் உணர்வுகளை அண்டவே விடக்கூடாது!
* சிறுகட்டி தவறி விழுவதால் ஏற்படும் தலைக்காயம் போன்றவற்றை மருந்து போட்டு மறந்துவிவது சரியல்ல. தலையில் ஏற்படுகிற சிறு காயம் - உடனே தன் விளைவைக் காட்டாமல் பல வருடங்கள் கழித்து பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்து இருக்கிறது என்பதை உணருங்கள்!
* அளவுக்கு மீறிய மன உளைச்சல் மொத்தமாக நரம்பு மண்டலத்தையும் ரத்த ஓட்டத்தையும் காவு வாங்கக்கூடியது. முறையான உடற்பயிற்சி, யோகா மற்றும் தியானம் உளைச்சலில் இருந்து ஓய்வு கொடுக்கும். நடப்பது நடந்தே தீரும் என்ற தத்துவார்த்த அணுகுமுறையை விழிப்பு உணர்வோடு கடைப்பிடிக்க ஆரம்பித்தால் பிரச்னைகளைப் பதறாமல் அணுக முடியும்!
* கூடுமானவரையில் பிரச்னைகளைத் தொலைபேசி மூலம் தீர்த்துக்கொள்ள முனையாதீர்கள். வெறும் குரல்கள் எப்போதுமே நம் மனப்பாங்கை எதிராளிக்கு முழுமையாகக் காட்டாது. தவறான புரிந்து கொள்ளுதலால் பரஸ்பரம் எரிச்சலும் விரக்தியும் அதிகமாகிப் போகும். மூளை சூடேறி வரிசையாகப் பல விளைவுகளை நம் உடலில் காட்டும்.
* சுறுசுறுப்பாக வேலை பார்த்துவிட்டு ஓய்வு பெற்றவர்களை, "போதும் உழைச்சது, சும்மா உட்கார்ந்து நிம்மதியா ரெஸ்ட் எடுங்க" என்று முடக்கிப் போடக்கூடாது. "சும்மா" என்பது மூளையைப் பொறுத்தவரை சைத்தான். எதிர்மறையான விஷயங்களை மட்டுமே நினைக்க வைத்து, அதிலேயே மூழ்கடித்து, பல மன வக்கிரங்களுக்கும் உடல் உபாதைகளுக்கும் வெற்றிலைத் தாம்பூலம் வைத்துவிடும்!
* ஓய்வு பெற்றாலும் பிஸியாகவே இருந்தாலும் ஒவ்வொரு மனிதனும் தன் மன அமைதிக்கு ஏற்ற புத்தகங்களைத் தேடிப் பிடித்துப் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். புத்தகங்களைப் போல் ஒரு நல்ல நண்பன் மூளைக்குக் கிடைக்கவே முடியாது. ஆன்மிக நாட்டம் கொண்டவர்களுக்கு அது தொடர்பான புத்தகங்கள் மிகப் பெரிய வரப்பிரசாதம்!
No comments:
Post a Comment