புளி - 1 சின்ன உருண்டை
தண்ணீர் - 2 கப் (நார்மல் சைஸ்)
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
உப்பு - முக்கால் ஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 3
செய்முறை :
*கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
*குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே" என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்" என்று சொல்ல நேரிடலாம்.
*தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
*சிறு குழந்தைகளை மிரட்டும் போது, "கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்" போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.
*சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், "அப்பாகிட்டே சொல்லிடாதே" என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே "அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்" என்று மிரட்டும்.
*குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே" போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.
* குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. " கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்" என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.
*குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.
*உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.
*படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, "பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும். "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்" என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்" என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.
*குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.
* ஆபிசில் இருக்கும் போது, உங்களது சொந்த மொபைல்போனே என்றாலும், அதிகம்பேசுவதை தவிருங்கள். இதனாலும், உங்கள் பெயர் ரிப்பேர் ஆகலாம்.
* உடன் பணியாற்றுபவர்களில், ஒரு சிலரை அப்பா மாதிரி, அண்ணன் மாதிரி என்று, நீங்கள் நினைத்துக் கொண்டுசகஜமாகப் பழகுவதை, சம்பந்தப்பட்ட நபர்களே கூட, வேறு விதமாகப் பரப்பலாம். எனவே, ஆபிசில் இந்த மாதிரியானஉறவு முறை கொண்டாடுவதை தவிருங்கள்.
* உடன் பணிபுரியும் ஆண்களிடம் பேசுவதில் தவறில்லை; ஆனால், பேசுவதற்கான எல்லையை சரியாக வகுத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, உங்கள் குடும்ப விஷயங்களைப் பற்றி அவர்களிடம் கூறாதீர்கள்; அதே போல், அவர்களின் குடும்ப விஷயத்திலும் அக்கறை காட்டாமல் இருப்பது நல்லது. உங்கள் இரக்க சுபாவத்தை தேவையற்றவிதத்தில் பயன்படுத்துவதை அறவே தவிருங்கள். இல்லாவிடில், அது உங்கள் வாழ்க்கைப் பாதையையே மாற்றக் கூடும்என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
* நீங்கள் பேசும் நபரின் கண்களைப் பார்த்துப் பேசுங்கள். இப்படி கண்களைப் பார்த்து பேசுவதன் மூலம், அவர் உள்ளத்து அசைவுகளை ஸ்கேன் செய்ய முடியும். அதன்மூலம், நீங்கள் பேசும் நபர் நல்லவர்தானா, உங்களைப்பற்றிய அவரது எண்ணம் நல்லது தானா என்பதை அறிய முடியும். அதற்கு ஏற்றவாறு நீங்களும் நடந்து கொள்ளலாம்.
* உடன் பணிபுரியும் ஆண்களால் ஏற்படும், பாலியல் தொடர்பான பிரச்னைகளை முடிந்த வரை நீங்களே சமாளிக்கமுயலுங்கள். பிரச்னை, குறிப்பிட்ட எல்லையை தாண்டும் போது, உயரதிகாரியிடம் புகார் செய்ய தயங்காதீர்கள்.
* ஆபாசமாக பேசுவது, பாட்டு பாடுவது, அருவருக்கத்தக்க அல்லது விரும்பத்தகாத புத்தகம் அல்லது படங்களைகொடுப்பது போன்றவையும் பாலியல் தொந்தரவுகளே. எனவே, இதுகுறித்து கவனமாக இருங்கள். உங்களிடம் இப்படியாராவது நடந்து கொள்வதாக தெரிந்தால், அவர்களிடம் இருந்து எச்சரிக்கையுடன் விலகி இருங்கள்.
* உடன் பணியாற்றும் ஆண்களிடம் கண்களால் பேசாதீர்கள். "எக்குத்தப்பான' அர்த்தமாகிப் போகும். இப்படி எல்லாம்நீங்கள் இருந்தும், உங்கள் பெயர் ரிப்பேரா? டோன்ட் கேர்... டேக் இட் ஈஸி! என்று உங்கள் பணியை தொடருங்கள்.
* இது போன்ற பிரச்னைகள் பெண்களுக்கு மட்டும் தான் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. பெண்களின் சில தவறான அணுகுமுறை தான் ஆண்கள் இப்படி நடந்து கொள்வதற்கு காரணம் என்று ஆண்கள் சொல்கின்றனர்.
* ஒரு மனிதனின் மூளை ஆரோக்கியத்தோடு இருப்பதற்கான விதை, அவன் கருவுக்குள் இருக்கும்போதே போடப்பட வேண்டும். அந்த வகையில் கருவுற்ற பெண்களின் உடல், மன ஆரோக்கியம் மிக மிக முக்கியம்.
* பிறந்ததும் குழந்தை அழுதுவிட்டாலே, மூளை இயங்கத் தொடங்கிவிட்டது என்று அர்த்தம். உரிய காலத்தில் தவழுதல், நடத்தல் ஆகியவை நடக்காவிட்டால் முதல் உதவிக்கு நாட வேண்டியது "நியூரோ' சம்பந்தப்பட்ட மருத்துவரைத்தான்!